tgindex
கதைகளின் கதை

கதைகளின் கதை

Статистика

தமிழ் கதை தொகுப்பு Tamil story

Последний пост
27 мая
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
22
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
2 257
+10 за 5 дн.
Сутки
+3
+0,13%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
597
22 постов
Вовлечённость
26,5%
к подписчикам
Постов в день
0,0
всего 22
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • 27 мая1 4281

    நேற்று பெங்காலில் நடந்த ஒரு சம்பவம், நம்மை ஆச்சரியப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒரு டாக்ஸி டிரைவரின் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. ஒரு கிளப்பில் நடந்த பார்ட்டிக்குப் பிறகு, நான்கு இளம் பெண்கள் இரவு நேரத்தில் ஒரு டாக்ஸியில் பயணம் செய்ததிலிருந்தே இந்த சம்பவம் தொடங்குகிறது. பயணத்தின் போது, மூன்று பெண்கள் தங்களது வீடுகளில் ஒவ்வொருவராக இறங்கினர். இறுதியாக இருந்த நான்காவது பெண், “அனைவருடைய கட்டணத்தையும் சேர்த்து நான் கடைசியில் கொடுக்கிறேன்” என்று டிரைவரிடம் கூறியிருந்தாள். இறுதியாக அந்த பெண் இறங்க வேண்டிய இடத்துக்கு டாக்ஸி வந்தடைந்தது. வெளியே இறங்கியவள், தனது பையில் பணம் தேடுவது போல சில நிமிடங்கள் நடித்துவிட்டு, “யாரோ என் பாக்கெட்டை அடிச்சுட்டாங்க… என்னிடம் பணமே இல்லை…” என்று திடீரென கூறினாள். ஆனால் அவள் பொய் சொல்கிறாள் என்பதை டிரைவர் தெளிவாக உணர்ந்தார். அதையே அவர் நேராக அவளிடம் கூறினார். இதைக் கேட்டதும் அந்த பெண் உடனே சத்தமிட்டு பிரச்சனை செய்ய ஆரம்பித்தாள். “டிரைவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்… என்னைத் தொட்டார்…” என்று குற்றம் சாட்டி அங்கே பெரிய பரபரப்பை ஏற்படுத்தினாள். ஆனால் அதற்குப் பிறகுதான் இந்தக் கதையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. தனக்கு எதிராக பெரிய பிரச்சனை வரப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்திருந்த அந்த டிரைவர், உடனே தனது மொபைல் போனை எடுத்துக் காட்டினார். வண்டிக்குள் நடந்த அனைத்தையும் அவர் தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார்! பார்த்த அந்த பெண் முற்றிலும் அதிர்ச்சியடைந்தாள். சம்பவத்தை அறிந்து போலீசாரும் அங்கு வந்தனர். வீடியோ ஆதாரங்களை பார்த்த போலீசாருக்கு உண்மை நிலை புரிந்தது. பின்னர் அந்த பெண்ணிடமிருந்தே 3000 ரூபாய் டாக்ஸி கட்டணத்தை வசூலித்து டிரைவரிடம் கொடுத்தனர். அந்த முக்கியமான தருணத்தில் டிரைவர் வீடியோ பதிவு செய்யாமல் இருந்திருந்தால், அவரது நிலை என்ன ஆகியிருக்கும் என்று சிந்திக்க வேண்டியதே. எந்த தவறும் செய்யாத அந்த சாதாரண மனிதர் அடியடிக்குப் பலியாகி இருக்கலாம்… சிறைக்கு செல்ல நேர்ந்திருக்கலாம்… அவருடைய வாழ்க்கையே சிதறியிருக்கும். இன்றைய காலத்தில் வாழும் போது, நம்முடைய பாதுகாப்புக்காக இத்தகைய முன்னெச்சரிக்கைகளை எடுத்து வைத்திருப்பது எவ்வளவு அவசியம் என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

  • 27 мая1 0441

    போபாலில் வைக்கப்பட்டிருக்கும் இந்த 'ஆல்கா மரம்' ஒரு நல்ல ஆரம்பம், மாசற்ற எதிர்காலத்திற்கான ஒரு சாளரம். இருந்தாலும், சயின்ஸ் எவ்வளவுதான் அட்வான்ஸாகப் போனாலும், வீட்டு வாசலில் நாம் வைக்கும் ஒரு வேப்ப மரக் கன்றுக்கு முன்னால் இந்த லட்ச ரூபாய் மெஷின் எல்லாம் சும்மா 'ஜுஜுபி'. மெஷின் தரும் ஆக்சிஜன் உயிரைக் காக்கும்; ஆனால் இயற்கை தரும் மரங்கள் மட்டும்தான் உலகைக் காக்கும்.

  • 27 мая1 0442

    ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒரு விசித்திரமான திருட்டு நடந்தது. ஒரு நள்ளிரவில், நகரின் மிக முக்கியமான ஆய்வகத்தின் பூட்டப்பட்ட கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த திருடர்கள், அங்கிருந்த தங்கம், வைரம் எதையும் தொடவில்லை. மாறாக, அங்கிருந்த ஒரு பெரிய கண்ணாடித் தொட்டியில் பச்சை நிறக் கூழ் போல மிதந்து கொண்டிருந்த சில லிட்டர் தண்ணீரை மட்டும் அதீதப் பாதுகாப்புடன் திருடிச் சென்றார்கள். போலீஸாருக்கு ஒரே குழப்பம். "என்னடா இது, சாக்கடைத் தண்ணீர் மாதிரி இருக்கும் இந்த பச்சைத் திரவத்தைத் திருட இவ்வளவு பெரிய திட்டமா?" என்று மண்டையைப் பிட்டுக் கொண்டார்கள். உலகமே வியந்து பார்க்கும் அந்தத் திரவத்தின் மதிப்பு பல கோடிகள். ஏன் தெரியுமா? அது சாதாரணப் பாசித் தண்ணீர் அல்ல; பூமியின் எதிர்காலத்தையே மாற்றப்போகும் ஒரு 'அதிசய அமுதம்'. இது முழுக்க முழுக்க ஒரு கற்பனையான கதை. டோக்கியோவில் இப்படி ஒரு நள்ளிரவுக் கொள்ளை நிஜமாக நடக்கவில்லை. கற்பனையான இந்த கதையில் கூறப்பட்ட பச்சை திரவம் நிஜம். அந்த பச்சை திரவம் தான் இப்பொழுது இந்தியாவுக்குள் வந்திருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள சுவாமி விவேகானந்தர் பூங்காவில் (அசோகா கார்டன்) இந்தியாவின் முதல் 'ஆல்கா மரம்' நிறுவப்பட்டுள்ளது. 'மஷ்ரூம் வேர்ல்ட் குரூப்' என்ற அமைப்பால், கிட்டத்தட்ட 50 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்களின் 2 ஆண்டு கால உழைப்பில் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு, சமீபத்தில் மே 1ஆம் தேதி அன்று திறந்து வைக்கப்பட்டது. அறிவியல் உலகத்தில் இதற்கு 'பயோ-கம்ப்யூட்டர்' அல்லது 'ஃபோட்டோ-பயோரியாக்டர்' (Photobioreactor) என்று பந்தாவாகப் பெயர் வைப்பார்கள். எளிமையாகச் சொன்னால், இது ஒரு செயற்கை மரம். போபாலில் நிறுவப்பட்டது 3 மீட்டர் உயரமுள்ள ஒரு 'ஃபோட்டோ-பயோரியாக்டர்' அமைப்பாகும். இதன் மேல் பகுதியில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதால், இது பகுதியளவு சூரிய ஆற்றலிலேயே இயங்குகிறது. நமக்குத் தெரிந்த சாதாரண மரங்கள் என்ன செய்கின்றன? காற்றில் இருக்கும் கரியமில வாயுவை இழுத்துக்கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனைத் தருகின்றன. இதையே இந்த ஆல்கா மரமும் செய்கிறது. ஆனால், இதில் இலைகளுக்குப் பதிலாக 'மைக்ரோ-ஆல்கே' எனப்படும் நுண்ணிய பாசிகள் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய கண்ணாடி உருளைகளுக்குள் தண்ணீரை ஊற்றி, இந்த பாசிகளை வளர்க்கிறார்கள். சூரிய ஒளி இதன் மேல் படும்போது, இந்த பாசிகள் காற்றில் உள்ள மாசுகளை 'அபாரம்' என்று உறிஞ்சிக் கொண்டு, அசுர வேகத்தில் ஆக்சிஜனை ரிலீஸ் செய்கின்றன. இந்த ஒரு செயற்கை மரம் செய்யும் வேலையை, கிட்டத்தட்ட 15 முதல் 20 முதிர்ந்த நிஜ மரங்கள் சேர்ந்துதான் செய்ய முடியும். அதாவது, இருபது மரங்களின் சக்தியை ஒரே ஒரு சிறிய மெஷினுக்குள் அடக்கிவிட்டார்கள். நம் ஊர் நகரங்களில் காற்று மாசு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். டெல்லியிலும், மும்பையிலும், ஏன் நம்மூர் பெருநகரங்களிலும் பனிமூட்டம் என்று நினைத்து நாம் சுவாசிப்பது பாதி புகை மூட்டம்தான். இந்தச் சூழலில் இந்த ஆல்கா மரம் இந்தியாவிற்கு ஒரு வரப்பிரசாதம். இந்திய நகரங்களில் மரங்கள் நட இடமே இல்லை. எல்லாமே கான்கிரீட் காடுகள். இந்த ஆல்கா மரத்தை ஒரு சிறிய சிக்னலிலோ அல்லது பஸ் ஸ்டாண்ட் ஓரத்திலோ நட்டுவிடலாம். மிகக் குறைந்த இடத்தில் அதிக ஆக்சிஜன். காற்றில் இருக்கும் நுண்ணிய தூசுத் துகள்கள் மற்றும் தொழிற்சாலைப் புகையை இது ஸ்பாஞ்ச் போல உறிஞ்சி, சுத்தமான காற்றை வாரி வழங்குகிறது. இந்த பாசிகள் வளர்ந்து பெருகியவுடன், அதை அப்புறப்படுத்திவிட்டுப் புதிய பாசிகளை வைப்பார்கள். அப்படி எடுக்கப்படும் பழைய பாசிகளைக் கொண்டு பயோ-டீசல் (Bio-diesel) மற்றும் இயற்கை உரங்களைத் தயாரிக்க முடியும். 'வேஸ்ட்டிலும் ஒரு பெஸ்ட்'. விஞ்ஞானத்தில் 'பக்கவிளைவு இல்லாத கண்டுபிடிப்புகளே இல்லை. இந்த ஆல்கா மரத்திற்கும் சில பலவீனங்கள் உண்டு. நிஜ மரத்திற்குத் தண்ணீர் ஊற்றினால் போதும், அது பாட்டிற்கு வளர்ந்துவிடும். ஆனால், இந்த ஆல்கா மரத்திற்குத் தொடர்ச்சியாக மின்சாரம் தேவை. கண்ணாடிக் குழாய்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் பாசிகள் செத்துப்போய், மரம் வெறும் 'வேஸ்ட் கண்ணாடி'யாகிவிடும். இது காற்றைச் சுத்தப்படுத்துமே தவிர, நிஜ மரங்கள் தரும் குளுமையான நிழலையோ, பறவைகளுக்கான கூட்டையோ, மழை மேகங்களை ஈர்க்கும் சக்தியையோ தராது. ஆரம்பக்கட்ட தயாரிப்புச் செலவு மிக அதிகம். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இதை வைப்பது பொருளாதார ரீதியாக இப்போதைக்குக் கொஞ்சம் கஷ்டம். தொழில்நுட்பம் வளர வளர நாம் இயற்கையைத் தொலைத்துக் கொண்டே வருகிறோம். அதன் விளைவுதான், மரத்தைக்கூட நாம் கடையில் காசு கொடுத்து 'மெஷினாக' வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

  • без подписи

  • கிராம தேவதை வழிபாட்டில் தொன்மத்தின் எச்சங்கள்: கந்துக்கற்களும் அதன் வரலாற்றுப் பின்னணியும் ஆக்கம்: ஆறகளூர் பொன்.வெங்கடேசன் தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம். தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள காவல் தெய்வ மற்றும் சிறு தெய்வக் கோயில்கள், வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல; அவை தமிழர்களின் தொன்மையான பண்பாட்டையும், வழிபாட்டுப் பரிணாம வளர்ச்சியையும் காலங்காலமாகப் பாதுகாத்து வரும் திறந்தவெளி வரலாற்றுப் பெட்டகங்களாகும். அந்த வகையில், பல கிராம தேவதை கோயில்களின் முன்பாக நடப்பட்டிருக்கும், உருளையான அமைப்பைக் கொண்ட குத்துக்கற்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. மேற்புறம் சற்று வளைவாகவும், அதற்குச் சற்றே கீழே ஒரு சிறு வரிப்பள்ளம் (groove) போன்ற அமைப்புடனும் காணப்படும் இந்தக் கற்களை, மேலோட்டமாகப் பார்த்தால் சிவலிங்கத்தின் பாணம் போலத் தோன்றும். சில நேரங்களில் கிராம மக்கள் இதை மழுபடையான் (ஆயுதம்) என்றோ, காவல் தெய்வத்தின் வேறு வடிவம் என்றோ கருதுவதும் உண்டு. ஆனால், தொல்லியல் மற்றும் வரலாற்று நோக்கில் இந்தக் கற்களின் பின்னணி சங்க காலத்தோடு தொடர்புடையது. சங்க கால கந்து வழிபாடு உருவ வழிபாடு (Anthropomorphic) தோன்றுவதற்கு முன்பாக, இயற்கை சக்திகளையும் அருவுருவ (Aniconic) குறியீடுகளையும் வழிபடும் வழக்கம் பண்டைய தமிழர்களிடம் பரவலாக இருந்தது. இதன் மிக முக்கிய வெளிப்பாடே 'கந்து வழிபாடு' ஆகும். சங்க இலக்கியங்களில் "கந்துடைப் பொதியில்" என்று பல இடங்களில் இது குறிப்பிடப்படுகிறது. ஆரம்ப காலத்தில் மரத்தண்டுகளை நட்டு (மரக்கந்து) இறைவனாக வழிபட்ட மக்கள், காலப்போக்கில் அவை அழியக்கூடியவை என்பதை உணர்ந்து, காலத்தால் அழியாத கற்களை (கல்கந்து) அதே வடிவில் நட்டு வழிபடத் துவங்கினர். கிராம தேவதைகளுக்கு முன்பாகக் காணப்படும் இந்த உருளை வடிவக் கற்கள், அந்தத் தொன்மையான கந்து வழிபாட்டின் நேரடி எச்சமாகவே கருதப்பட வேண்டும். லிங்க வழிபாட்டின் பரிணாமம் இந்தக் கந்துக்கற்கள் சிவலிங்கத்தைப் போலவே தோற்றமளிப்பது தற்செயலானதல்ல. மரக்கந்து மற்றும் கல்கந்து வழிபாட்டின் தொடர்ச்சியே, அல்லது அதன் பரிணாம வளர்ச்சியே பிற்காலத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட லிங்க வழிபாடாக மாறியிருக்கலாம் என்பது வரலாற்று ஆய்ஞர்களின் வலுவான கருத்தாகும். பெருந்தெய்வ வழிபாட்டு முறைகள் பரவலாக்கப்பட்ட போது, கிராமப்புறங்களில் தொன்றுதொட்டு வழிபடப்பட்டு வந்த இந்த பழமையான கந்துகள், சிவனின் பாணமாகவோ அல்லது லிங்கமாகவோ பாவித்து வழிபடும் வழக்கம் உருவாகியிருக்கலாம். ஆயுதமா? காவல் குறியீடா? சிலர் இதை 'மழுபடையான்' போன்ற ஆயுதமாகக் கருதினாலும், சிற்ப சாஸ்திரங்கள் மற்றும் செப்பேடுகளில் 'மழு' (Axe) என்பது ஒரு பிடியும், தட்டையான வெட்டும் பகுதியும் கொண்டதாகவே சித்தரிக்கப்படுகிறது. எனவே, இந்தக் கல்லை ஆயுதமாகக் கருதுவதை விட, பிரதான தெய்வத்திற்கு முன்பாக காவல் நிற்கும் 'குத்துக்கல்' அல்லது காவல் தெய்வத்தின் அருவுருவக் குறியீடாகக் கருதுவதே வரலாற்று அடிப்படையில் பொருத்தமானது. சில இடங்களில், ஆகம விதிக்கு உட்படாத கிராமக் கோயில்களில் இவையே பலிக்கல்லாகவும் (Bali Kal) உருமாற்றம் பெற்றிருக்கலாம். முடிவுரை கிராமத்து வீதிகளிலும், கோயில் முற்றங்களிலும் மழையிலும் வெயிலிலும் நனைந்து கொண்டிருக்கும் இந்தக் கற்கள், ஏதோ ஒரு காலத்தில் சாதாரணமாக நடப்பட்டவை அல்ல. அவை நமது மூதாதையர்கள் இயற்கையோடு இயைந்து, தங்களுக்குப் புரிந்த வடிவில் இறைசக்தியை உருவகப்படுத்திய சங்க காலத்தின் கல்வெட்டுச் சான்றுகள் இல்லாத வரலாற்றுத் தடயங்கள். நமது பண்பாட்டின் வேர்களைத் தேடும் ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான தொல்லியல் எச்சங்கள் இவை. ஆறகழூர் வெங்கடேசன் பொன்

  • без подписи

  • படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!" இந்திய அறிவியலாளர் பேராசிரியர் பி. ராமசாமியைப் (Professor P. Ramasamy) இவர் படிக வளர்ப்பு (Crystal Growth) துறையில் ஆற்றிய அரும்பணிகளுக்காகவும், இத்துறையில் இந்தியா உலக அளவில் ஏழாவது நாடாகத் திகழக் காரணமாக இருந்ததற்காகவும் இத்தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.பேராசிரியர் பி. ராமசாமியின் முக்கிய சாதனைகள்புதிய தொழில்நுட்பம்: தனது மாணவர் சங்கரநாராயணனுடன் இணைந்து, எளிமையான மற்றும் சிக்கனமான சங்கரநாராயணன்-ராமசாமி (எஸ்.ஆர்.) படிக வளர்ப்பு முறையை உருவாக்கினார்.தேசத்தின் முதல் படிகங்கள்: இந்தியாவின் முதலாவது கேலியம் ஆர்சனைடு (1989) மற்றும் இண்டியம் பாஸ்பைட் (1992) படிகங்களை வெற்றிகரமாக வளர்த்தெடுத்தார்.படிக வளர்ச்சி மையம்: 1982-இல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டின் மிக முக்கிய ஆய்வகங்களில் ஒன்றான படிக வளர்ச்சி மையத்தை (Crystal Growth Centre) நிறுவினார்.சூரிய ஆற்றல்: உயர்தர சிலிக்கான் படிகங்களை உருவாக்கி, சூரிய மின்கலங்களின் செயல்திறனை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். 'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும். உதாரணத்துக்கு சோடியம் குளோரைடு, சிலிக்கான், ஜெர்மானியம் போன்றவை ஒரே மாதிரியான பண்புகளைத் தனது பருமன் முழுவதும் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட கிரிஸ்டல்களை சிறிய விதையைப் போல் பயன்படுத்தி முழுவதும் வளர்ந்த கிரிஸ்டல்களை வளர்த்து உருவாக்குகின்றனர். அறிவியலாளர்கள். இதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 'கிரிஸ்டல் குரோத்' பி.ராமசாமியின் பங்களிப்பு அபாரமானது. 💡 இவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார். முழு கட்டுரை 👇👇 https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2026/May/16/a-scholar-crowned-in-crystal-growth

  • நாயுருவி (Achyranthes aspera) சித்த மருத்துவத்தில் ‘சர்வ ரோக நிவாரணி’ என்று அழைக்கப்படும் ஒரு முக்கிய மூலிகை. இது பல் வலி, மூல நோய், செரிமானக் கோளாறுகள், வீக்கம், இருமல், மற்றும் சரும நோய்களைக் குணப்படுத்தவும், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது. நாயுருவியின் முக்கிய மருத்துவ பயன்கள் (Uses in Tamil): பல் வலி மற்றும் வாய் சுகாதாரம்: நாயுருவி வேரால் பல் துலக்குவது பல் வலி, ஈறு வீக்கம், மற்றும் பல் சொத்தையை நீக்கும். மூல நோய் (Piles) சிகிச்சை: நாயுருவி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் கலந்து சாப்பிடுவது ரத்த மூலத்திற்குச் சிறந்த மருந்தாகும். இருமல் மற்றும் சளி: வேர்ப் பொடியுடன் மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து உட்கொண்டால் இருமல், நுரையீரல் சளி குறையும். செரிமானம் மற்றும் மலச்சிக்கல்: நாயுருவி இலைப்பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கலை நீக்கும். வீக்கம் மற்றும் மூட்டுவலி: இதன் இலைகள் அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) பண்புகளைக் கொண்டுள்ளதால், உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் மூட்டுவலியை குறைக்க உதவும். சருமப் பிரச்சனைகள்: இதன் இலைகளை மஞ்சளுடன் அரைத்து பூசுவது தோல் நோய்களுக்கு தீர்வாக அமையும். சிறுநீரக கோளாறுகள்: இது ஒரு டயூரெடிக் ஆக செயல்பட்டு, சிறுநீர் வழியாக நச்சுகளை அகற்றி சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. பயன்படுத்தும் முறை: வேர்: பல் துலக்க மற்றும் கஷாயம் செய்ய. இலை: அரைத்து மூல நோய், சரும நோய்களுக்கு பூச. விதை: உணவாகச் சமைத்து உட்கொள்ள. குறிப்பு: அதிக மருத்துவக் குணங்கள் கொண்டிருப்பதால், உட்கொள்ளும் முன் சித்த மருத்துவரை அணுகுவது நல்லது.

  • без подписи

  • தற்போது தாயகம் திரும்ப இருக்கும் ஆனைமங்கலம் செப்பேட்டில் உள்ள தகவல்கள் தற்சமயம் நெதர்லாந்து நாட்டில் உள்ள இந்தச் செப்பேட்டிற்கு பெரிய லெய்டன் செப்பேடு என மற்றொரு பெயர் உண்டு. சோழர் காலத்திய வரலாறு பற்றி தெரிந்து கொள்ள உதவிய முதல் செப்பேடு இதுதான்.இந்தச்செப்பேடு 1886 ல் படிக்கப்பட்ட பின்பு 1906 ஆம் ஆண்டு திருவலங்காடு செப்பேடு படிக்கப்பட்டது.இவ்விரண்டு செப்பேடுகளும் கிடைக்கப்பட்ட பின்னர் தான் சோழ வரலாறு கணிக்கப்பட்டது.ஆனைமங்கலம் செப்பேட்டில் சோழர்களின் குடும்ப வம்சாவளி வடமொழியில் சொல்லப்பட்டுள்ளது. ஶ்ரீவிஜய அரசன் மார விஜயதுங்கவர்மன்,தனது தந்தை சூளாமணி வர்மன் நினைவாக ஒரு பெளத்த விகாரம் கட்ட விரும்பி இராஜராஜரிடம் அனுமதி கேட்கிறார்.சத்திரியசிகாமணி வளநாட்டு பட்டண கூற்றம் பகுதியில் நாகப்பட்டினம் நகரில் புத்த விகாரம் கட்ட இராஜராஜர் அனுமதி தருகிறார்.(இதனை இராஜராஜர் காலத்திற்கு பின்பு இராஜேந்திரர் தனது ஆட்சியில் செப்பேட்டில் பொறிக்க உத்தரவிட்டார்).இந்தச் செப்பேட்டின் தமிழ்ப்பகுதியில் இராஜராஜர் தனது 29 ஆம் ஆட்சியாண்டு முடிந்து 92 ம்நாள் தஞ்சாவூர் அரண்மனைக்கு தெற்கு பக்கம் இருந்த இராஜாசிரியன் என்ற பந்தலில் இருந்த போது இந்த நிலக்கொடையை வழங்கியதாக உள்ளது. (பொன்னியின் செல்வன் படித்த அனைவருக்கும் இந்த சூடாமணி விகாரம் தெரிந்து இருக்கும்,ஆனால் அந்தக் கதை நடைபெறும் காலகட்டத்தில் சூடாமணி விகாரம் கிடையாது,இராஜராஜர் ஆட்சியின் இறுதிக்காலத்தில் தான் இந்த விகாரம் கட்டப்பட்டது) விகாரத்திற்கு வழங்கப்பட்ட சலுகைகள்: இந்த சூளாமணி விகாரத்திற்கு 97 வேலி,2 மா,ஒன்றை காணி,ஒரு முந்திரிகை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.மேற்படி நிலங்களுக்கு இதுவரை வரியாக தரப்பட்ட 8943 கலம்,2 தூணி,1 குறுணி,1 நாழி நெல் இனி கட்ட தேவையில்லை. பள்ளிகள்(பெளத்த,சமண கோவில்) அரசுக்கு செலுத்த வேண்டிய வரியான பள்ளிச்சந்தம் கட்ட தேவையில்லை. நிலதானம் வழங்கப்பட்ட நிலங்களில் புதிதாக கால்வாய் வெட்டிக் கொள்ளலாம்.ஊர் பொதுமக்கள் கல்வாயில் வரும் நீரை பாசனத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கனவே இந்த நிலங்களில் கிராம மக்களின் பாசனத்திற்காக பயன்படுத்தும் பழைய கால்வாய்களே அப்படியே அனுமதிக்க வேண்டும். உபரித்தண்ணீர் இதுவரை எந்த முறையில் அப்புறப்படுத்தப்பட்டதோ அதே முறையே இனியும் தொடரவேண்டும்.பழைய கல்வாய்த் தண்ணீரை தேக்கி வைக்க கூடாது, தண்ணீரை அதன் போக்கிலே பயன்படுத்த வேண்டும் சுட்ட செங்கலினால் மாடி வீடுகள் கட்டிக் கொள்ளலாம் பெருங்கிணறுகள்(புரவு) வெட்டிக் கொள்ளலாம் தென்னந்தோப்புகள் உருவாக்கிக் கொள்ளாலாம் எண்ணெய் செக்கு வைத்து எண்ணெய் ஆட்டிக் கொள்ளலாம் இந்த நிலத்திலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் கால்வாயை தடுக்கக் கூடாது மற்ற ஊர்களில் இருந்து இந்த நிலங்களுக்கு வரும் கால்வாயை பொதுமக்கள் தடுக்கக் கூடாது இப்பகுதி ஈழவர்கள் இந்த நிலங்களில் உள்ள பனை,தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கக்கூடாது(இது பெளத்த வழிபாட்டுத்தலம் என்பதால்,இப்பகுதியில் கள் இறக்க தடை) விகாரத்திற்கு செல்லும் வழியில் அலங்கார தோரணமும்,விகாரத்திற்கு உள்ளே பெரிய முரசுகளும் பயன்படுத்த அனுமதி. இதைத் தவிர கீழ்க்கண்ட வரிகளை விகாரத்திலிருந்து கட்டத் தேவையில்லை நாடாட்சி வரி,ஊராட்சி வரி,வட்டி நாழி,பிட நாழி,கண்ணால காணம்,வண்ணாரப் பாறை,குசக் காணம்,நீர்குழி,இலைக்கூலம்,தறிப்புடவை,தரகு,தட்டார்ப் பாட்டம்,இடைப் பாட்டம்,மன்று பாடு,மாவிரை,தீயெறி,இளம்புட்சி,கூத்திக்கால் சாசனத்தின் இறுதியில் இராஜேந்திர சோழரின் 5 உயர் அதிகாரிகள் கையொப்பமிட்டுள்ளனர் 1.அரையன் அருள்மொழி 2.கிருஷ்ணன் இராமன் 3.ஈராயிரவன் பல்லவராயன் 4.தேவதை கோமபுரத்து தாமோதரபட்டன் 5.அரையன் ஸ்கந்தன். 📚 சோழர் காலச் செப்பேடு கள்/முனைவர் மு.இராஜேந்திரன் இ.ஆ.ப 📸 Dhanasekar Prabakaran

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • இது ஒரு எளிய சிறுகதை! ஆனால் இதற்குள் விரிகிற நிலவெளிக்காட்சியும், மனிதர் உரையாடல்களும், புத்திக்கூர்மையைத் தூண்டுகிற கேள்விகளும், தேடலின் விளைவாக சிறுவன் அடைகிற பதில்களும், நரகக்கோட்டையில்கூட உதவிசெய்யும் ஒரு பாட்டியும், ஒரு அரக்கனின் கனவில் உதிக்கிற மானுடத்தீர்வுகளும்... என இக்கதை நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை விரிவினை நல்கக்கூடியது. கற்பனைத்தல் என்பது குழந்தைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் பேரமுதம். அதற்காக நாம் மலைகளை கடையத் தேவையில்லை, கதைகளை அடைந்தால் மட்டுமே போதும். தும்பி சிறார் கதைப்புத்தகம், ஒவ்வொரு குழந்தையும் தனக்குள் அடைகாக்கும் முட்டையின் உயிர்ச்சூடு சிறிதும் குறையாமல் இருப்பதற்கான ஒரு துணையிருத்தலை கதைகளின் வழியாகத் தேடிக் கண்டடைய முயல்கிறது. ஒரு அரக்கனின் கனவில் மானுடச் சிக்கலுக்கான தீர்வை உதிக்கச் செய்கிற சிறார்களின் பயணங்களால் இவ்வாழ்வு இன்னும் தரிசனப்படட்டும். ஒரு கதை ஒரு குழந்தையின் அகவுலகத்துக்குள் நிகழ்த்தும் கற்பனைப் பரப்புவெளி என்பது, கடவுள்கள் இட்ட முதல் தானியத்தின் வேருக்குச் சமமானது. அது உயிர்த்து உயிர்த்து நிறையும். அதைமட்டுமே குழந்தைமை அறியும். மொழியாலும் ஓவியங்களாலும் சிறாருலக மனநிகழ்கையை காகிதங்களில் படைப்பாக்கும் தும்பி... தூரக்குழந்தையின் ஒரு ஏக்கக்கனவு.

  • 'அரக்கனிடம் தப்பித்த சிறுவன்' என்கிற பழங்காலப் புனைகதை ஒன்று விடுகதையாடல் வடிவத்தில், ஏறக்குறைய நிறைய தேசங்களில் சிறார்களுக்கான விறுவிறுப்பு கூட்டும் கதையாகச் சொல்லப்படுகிறது. அக்கதையின் இறுதிப்பகுதி பின்வருமாறு... ... அப்பொழுது, அரசன் அந்தச் சிறுவனுக்கு ஒரு கட்டளை பிறப்பித்தான். அக்கட்டளையின்படி, நரகத்திற்குச் சென்று அங்குள்ள அரக்கனிடமிருந்து மூன்று தங்கமுடிகளை பிடுங்கிவர வேண்டும்! இந்த சவாலில் வென்றால் மட்டுமே அவன் இளவரசனாக நீடிக்கமுடியும், இல்லையெனில் சிறையில் தள்ளப்படுவான். நரகத்தின் வாசலைத்தேடி அந்தச் சிறுவன் தன்னுடைய பயணத்தைத் துவங்கினான். போகிற வழியில் அவன் ஒரு சிறுகிராமத்தை அடைந்தான். அக்கிராமத்தின் நடுவே ஒரு கிணறு இருந்தது. சிறுவன் அந்த கிராமத்தைத் தாண்டிச்செல்ல கிராமத்தினர் அனுமதிக்கவில்லை. "எங்கள் கேள்விக்கு பதில் சொன்னால் மட்டுமே வழிவிட முடியும்!" என்றனர். "என்ன கேள்வி?" என்றான் அவன். அதற்கு அவர்கள், "இந்தக் கிணறு ஏன் வறண்டிருக்கிறது?" என்ற கேள்வியை அவனிடம் கேட்டனர். அந்தச் சிறுவன் அவர்களிடம், “நான் திரும்பி வரும்போது இதற்கான விடை சொல்கிறேன்” என்றான். அதற்குச் சம்மதித்து ஊர்மக்கள் வழிவிட்டனர். போகிற வழியில் இன்னொரு கிராமத்தை அடைந்தான். அங்குள்ளவர்கள் எல்லோரும் ஒரு பட்டுப்போன மரத்தைப் பார்த்து, அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தனர். அவர்களும் அக்கிராமத்தைத் தாண்டிச்செல்ல சிறுவனை அனுமதிக்கவில்லை. "எங்கள் கேள்விக்கு பதில் சொன்னால் மட்டுமே வழிவிட முடியும்!" என்றனர். "என்ன கேள்வி?" என்றான் அவன். அதற்கு அவர்கள், "இந்த மரம் ஏன் பட்டுப்போயிருக்கிறது?" என்ற கேள்வியை அவனிடம் கேட்டனர். அந்தச் சிறுவன் அவர்களிடம், “நான் திரும்பி வரும்போது இதற்கான விடை சொல்கிறேன்” என்றான். அதற்குச் சம்மதித்து ஊர்மக்கள் வழிவிட்டனர். ஊர்மக்கள் காட்டிய வழியில் சென்றபோது, அச்சிறுவன் ஒரு ஆற்றங்கரையை அடைந்தான். அங்கு ஒரு படகோட்டி தனது படகுடன் காத்திருந்தான். அவனும் அச்சிறுவனைத் தடுத்தான். . "என் கேள்விக்கு பதில் சொன்னால் மட்டுமே உன்னை அக்கரையில் கொண்டுபோய் விடுவேன்!" என்றான். "என்ன கேள்வி?" என்றான் சிறுவன். அதற்கு படகோட்டி, "முடிவே இல்லாமல் படகோட்டும் நான் இதிலிருந்து எப்படித் தப்பிப்பேன்?" என்ற கேள்வியை சிறுவனிடம் கேட்டான். அந்தச் சிறுவன் அவனிடம், “நான் திரும்பி வரும்போது இதற்கான விடை சொல்கிறேன்” என்றான். அதற்குச் சம்மதித்து படகோட்டி சிறுவனை படகில் ஏற்றிச்சென்று மறுகரையில் விட்டான். இறுதியாக அச்சிறுவன் நரகக்கோட்டையை அடைந்தான். கதவைத் தட்டினான், அரக்கனின் பாட்டி வந்து கதவைத் திறந்தாள். தன்னுடைய முழுக்கதையையும் பாட்டியிடம் சொன்னான். இரக்கம்கொண்ட பாட்டியும், தனது பேரனான பேரரக்கனிடம் இருந்து மூன்று முடிகளை பிடுங்கித் தருவதாக சிறுவனுக்கு வாக்குத் தந்தாள். இரவு உணவு முடித்துவிட்டு அரக்கன் அயர்ந்து உறங்கும்போது, மின்னுகிற மூன்று தங்கமுடிகளை அவனுடைய உடம்பில் இருந்து ஒவ்வொன்றாகப் பிடுங்கினாள். ஒவ்வொரு முடியை பிடுங்கும்போது, அரக்கன் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்து தன் கனவில் கண்ட உருவங்களைப் பற்றியோ அல்லது பொருட்களைப் பற்றியோ பாட்டியிடம் சொன்னான். பாட்டியும் அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டாள். அவ்வாறு அவன் சொன்னவை மூன்று! ஒன்று தேரை! இன்னொன்று எலி! மூன்றாவது துடுப்பு! பாட்டி அந்த மூன்று தங்கமுடிகளையும் சிறுவனிடம் ஒப்படைத்து, அவன் கனவில் கண்டவைகளைப் பற்றிய ரகசியத்தையும் அவனிடம் சொன்னாள். சிறுவன் பாட்டிக்கு நன்றிசொல்லிவிட்டு நரகக்கோட்டையைவிட்டுக் கிளம்பினான். கரையில் படகோட்டி சிறுவனுக்ககவும் அவனுடைய பதிலுக்காகவும் காத்திருந்தான். சிறுவன் வந்து படகில் ஏறினான். படகோட்டியிடம் சிறுவன், "விருப்பமுள்ள பயணியின் கையில் உனது துடுப்பைக் கொடுப்பதன் மூலம் முடிவே இல்லாமல் படகோட்டும் நீ தப்பிப்பாய்” என்று அரக்கன் கண்ட மூன்றாம் கனவின் அர்த்தத்தைச் சொன்னான். விடை தந்த சிறுவனுக்கு படகோட்டி நன்றிசொல்லி மகிழ்ந்தான். அடுத்தபடியாக சிறுவன் மரமிருந்த கிராமத்திற்கு வந்து அவர்களிடம், “மண்ணுக்குள் உள்ள ஒரு எலி இந்த மரத்தின் வேரினை கொறித்துத் தின்கிறது, அதனால் இந்த மரம் பட்டுபோயிருக்கிறது என்றான். விடை தந்த சிறுவனுக்கு மக்கள் நன்றிசொல்லி மகிழ்ந்தனர். அதன்பின் முதலாவது கிராமத்தில் இருந்த கிணறுக்கு அருகே வந்து, “இந்தக் கிணற்றில் தண்ணீர் சுரக்கிற சுனையில் ஒரு தேரை படுத்து அந்தத் நீர்த்துளையை அடைத்திருக்கிறது. அதனால் இக்கிணறு வறண்டிருக்கிறது” என்றான். விடை தந்த சிறுவனுக்கு மக்கள் நன்றிசொல்லி மகிழ்ந்தனர். ஒருவழியாக, தன்னிடம் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் விடையளித்து, அரசன் கேட்ட மூன்று தங்கமுடிகளையும் அவரிடம் தந்து அந்த தேசத்திற்கே இளவரசன் ஆனான் அந்த சிறுவன்...

  • без подписи

  • ஏற்காடு குண்டூர் 'மான்குத்திப்பட்டான்' நடுகல்: ஒரு வரலாற்று ஆய்வு முன்னுரை: சேலம் மாவட்டம், ஏற்காடு மலைத்தொடரில் உள்ள குண்டூர் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள 'மான்குத்திப்பட்டான்' நடுகல், தமிழகத்தின் மலைவாழ் மக்களின் வீரத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும் பறைசாற்றும் ஒரு அரிய வரலாற்று ஆவணமாகும். பெருங்கற்கால ஈமச் சின்ன மரபுகளின் எச்சத்தோடு காணப்படும் இந்த நடுகல், வேட்டைச் சமூகத்தின் வாழ்வியலை நமக்குத் துல்லியமாக உணர்த்துகிறது. கற்பதுக்கை அமைப்பு: இந்த நடுகல்லின் மிக முக்கியமான சிறப்பம்சம் அதன் அமைவிடமாகும். இது வெறும் பலகைக் கல்லாக நடப்படாமல், மூன்று பக்கங்களிலும் கற்பலகைகள் நிறுத்தப்பட்டு, அதன் மேல் ஒரு பெரிய மூடுகல் (Capstone) கொண்ட 'கல்பதுக்கை' அல்லது 'கல்திட்டையின்' (Dolmen) உட்புறம் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது சங்க காலம் தொட்டு நிலவி வந்த பெருங்கற்காலப் பண்பாடு, இடைக்கால நடுகல் மரபிலும் தொடர்வதைக் காட்டும் சான்றாகும். வீரனின் சிற்ப அமைப்பு: நடுகல்லின் மையத்தில் வீரன் ஒருவன் வேட்டையாடும் கோலத்தில் மிக நேர்த்தியான புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளான். ஆயுதம் மற்றும் போர்நிலை: வீரன் தனது இடது கையில் வில்லைப் பிடித்து, வலது கையில் அம்பைத் தொடுத்து, நாணை காதுவரை இழுத்த நிலையில் (Archery pose) அம்பு எய்யும் துடிப்பான தோரணையில் காட்சியளிக்கிறான். சிகை அலங்காரம்: வீரனின் தலையில் பக்கவாட்டில் சரிந்த நிலையில் பெரிய கொண்டை வடிக்கப்பட்டுள்ளது. இது அக்கால மலைவாழ் வேட்டுவ சமூக மக்களின் தனித்துவமான அடையாளமாகும். ஆடை: இடையில் சிற்றாடை அணிந்து, உடலின் எடையைச் சமநிலைப்படுத்திப் பாய்ந்து வரும் விலங்கை எதிர்கொள்ளும் நிலையில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. விலங்கின் சித்தரிப்பு: வீரன் எய்யும் அம்புக்கு இலக்காக வலதுபுறத்தில் ஒரு மான் செதுக்கப்பட்டுள்ளது. அந்த மான் துள்ளிப் பாயும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளது, வேட்டையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. வேட்டையின் போது வனவிலங்குடன் போராடி வீரமரணம் அடைந்ததால், இவன் 'மான்குத்திப்பட்டான்' என்று அழைக்கப்படுகிறான். சதி மரபும் வணங்கிய நிலையில் மனைவியும்: இந்த நடுகல்லின் மற்றுமொரு சிறப்பம்சம், வீரனின் வலது காலிற்குப் பின்புறம் மிகச் சிறிய அளவில் செதுக்கப்பட்டுள்ள பெண் உருவமாகும். இது அவ்வீரனின் மனைவியைக் குறிக்கிறது. வணங்கிய நிலை: இச்சிற்பத்தில் மனைவி தனது இரு கைகளையும் கூப்பி, கணவனை வணங்கிய நிலையில் (அஞ்சலி முத்திரை) காட்சி தருகிறாள். வரலாற்றுப் பொருள்: கணவன் வீரமரணம் அடைந்தபோது, அவனது பிரிவைத் தாங்காமல் மனைவியும் உடன்கட்டை ஏறி (சதி) உயிர்நீத்ததை இது உறுதிப்படுத்துகிறது. தெய்வ நிலையை அடைந்த கணவனைத் தொழுத நிலையில் அவள் செதுக்கப்பட்டிருப்பது, அக்காலப் பெண்களின் தியாகத்தையும் குடும்பப் பிணைப்பையும் போற்றுவதாக அமைந்துள்ளது. முடிவுரை: சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வுகள் வழி வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த நடுகல், கொங்கு நாட்டு வரலாற்றில் மலைவாழ் மக்களின் சமூகக் கட்டமைப்பை அறிந்துகொள்ளப் பெரிதும் உதவுகிறது. வீரமும் தியாகமும் ஒருங்கே போற்றப்படும் இத்தகைய நடுகற்கள், நமது முன்னோர்களின் வாழ்வியலைப் பதிவு செய்துள்ள காலப் பெட்டகங்களாகும். ஆய்வு மற்றும் தகவல்: ஆறகளூர் பொன்.வெங்கடேசன், தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்.

  • без подписи

  • தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் இரும்புக்காலத்தைச் சேர்ந்த பழமையான தொல்பொருள் சான்று (கி.மு. 3,345) கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள திருமலாபுரத்தில், தொல்லியல் துறையினர் 8 அடி நீளமுள்ள இரும்பு ஈட்டி ஒன்றை கண்டெடுத்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட இரும்புக்காலத்தைச் சேர்ந்த இரும்புப் பொருட்களிலேயே இதுவே மிக நீளமான ஈட்டி என்று வல்லுநர்கள் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' (TOI) நாளிதழிடம் தெரிவித்துள்ளனர். #திருமலாபுரம் #சிவகலை #தூத்துக்குடி #தமிழ்நாடு #தொல்லியல் #பழமையானவரலாறு #இரும்புக்காலம் #AncientHistory #Archaeology #IronAge #HistoricDiscovery #IndianHistory #AncientTamil #Heritage #CulturalHeritage #HistoryLovers #BreakingNews #ArchaeologyFind #TamilCulture