Naushin_Binth_Sha
Статистикаஅல்குர்ஆன் அஸ் ஸுன்னாஹ் ஒளியில் உங்களுக்காக!... وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْن.َ (41:33)
- Последний пост
- 24 июл.
- Последнее чтение
- 13 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 21
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 207
- 1/48двое суток
- 237
- 1/72трое суток
- 255
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
ஒரு ஸலவாத்; அளப்பரிய நன்மைகள்! நபி (ﷺ) அவர்கள் மீது நாம் சொல்லும் ஒவ்வொரு ஸலவாத்தும் நமது பாவங்களை போக்கி, அந்தஸ்தை உயர்த்துகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமை நாளில் அதிகமாக ஸலவாத் சொல்வோம்!
#இறைவேதம் 📌✨ حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன் : என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். (அல்குர்ஆன் 23:99) لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُ كَلَّا اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَا وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:100)
இமாம் அல் குர்துபி (ரஹி) அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு பெண் தன் கணவனுக்குச் செய்யும் பணிவிடையும், அவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதும் மார்க்கத்தில் மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். அவனது உரிமைகளைப் பேணி நடப்பது இறைவழிபாட்டிற்கு நிகரானது. நூல் : தஃப்ஸீர் அல் குர்துபி
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்! எனவே, நீங்கள் (அவர் மீது) ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள். اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் : 33:56)
மார்க்கமுள்ள பெண்ணை மணந்துக் கொள்ளுங்கள்! ✨ இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. அவளுடைய செல்வத்திற்காக 2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளுடைய அழகிற்காக 4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். நூல் : ஸஹீஹ் புகாரி 5090.
без подписи
ஃபஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம்!
ஒற்றை ஸலவாத்துக்கு படைத்த எஜமானனின் பத்து அருள்கள்!
без подписи
இறைநம்பிக்கையும் துஆவும்!
без подписи
без подписи
உன்னை நேசிக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்!
பொறுமையும், உறுதியும் இருந்தால் வாழ்கை உயர்வடையும்! 🎙️ அஷ்ஷெய்ஹ் முஜாஹித் இப்னு ரஸீன் (ஹஃபிதஹுல்லாஹ்)
கர்பலா ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே அருட்கொடையாக வந்த அவர்களின் மரணத்தை விட முஸ்லிம்களுக்குப் பெரிய இழப்போ அல்லது துக்கமோ இருக்க முடியாது. அபூபக்கர் (ரழி) - உம்மத்தின் சிறந்த மனிதர், இயற்கை மரணமடைந்தார். உமர் (ரழி) தொழுகை நடத்தும்போது மிகக் கொடூரமாகக் குத்தப்பட்டு அதனால் 2 நாட்கள் துன்பத்திற்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டார். உஸ்மான் (ரழி) குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த நிலையில், அவரது வீட்டிற்குள் வைத்து ஹவாரிஜ்களால் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார். அலி (ரழி) தொழுகைக்குச் செல்லும் வழியில் அதே ஹவாரிஜ் கொள்கை சார்ந்த ஒருவனால் கொலை செய்யப்பட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ அல்லது நான்கு நேர்வழி நடந்த கலீபாக்களோ தங்களுக்கு முன்னால் வாழ்ந்து மரணித்த அல்லது கொலை செய்யப்பட்ட எந்தவொரு உத்தமருக்கும் வருடா வருடம் நினைவேந்தல் கொண்டாடவில்லை. மார்க்கத்தின் சட்டப்படி, ஒரு முஸ்லிம் இறந்துவிட்டால் அவருக்காக துக்கம் அனுஷ்டிக்க அனுமதிக்கப்பட்ட காலம் மிகக் குறைவு. ஒருவருடைய மரணத்திற்காக அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே துக்கம் அனுஷ்டிக்க அனுமதியுண்டு.கணவன் இறந்தால் மனைவி மட்டுமே 4 மாதங்களும் 10 நாட்களும் இத்தா இருக்க வேண்டும்.இதைக் கடந்து, ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட நாளில் கூடி அழுது, மார்பில் அடித்து, துக்கத்தை புதுப்பிப்பது நபியவர்களின் வழிமுறைக்கு (ஸுன்னாவிற்கு) முற்றிலும் முரணான செயலாகும். ஹுஸைன் (ரழி) அவர்கள் கர்பலா மைதானத்தில் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டது ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்திற்கும் ஒரு பேரிழப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்காக ஒவ்வொரு ஆண்டும் முஹர்ரம் மாதத்தில் ஊர்வலம் செல்வது, உடலைக் காயப்படுத்திக் கொள்வது, சிறப்பு நினைவேந்தல் கூட்டங்கள் நடத்துவது போன்றவை பிற்காலத்தில் மார்க்கத்தில் நுழைக்கப்பட்ட அனாச்சாரங்கள் (பித்அத்கள்) ஆகும். அன்பையும் மரியாதையையும் காட்ட சிறந்த வழி, அவர்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான இஸ்லாமிய வழியைப் பின்பற்றுவதே தவிர, மார்க்கம் சொல்லாத சடங்குகளை உருவாக்குவது அல்ல.
ஆஷுரா / கர்பலா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரரரான ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலா மைதானத்தில் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு பெரும் துயரமே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இஸ்லாமிய மார்க்க சட்டப்படி ஒருவரது மரணத்திற்காகப் பல வருடங்கள் அல்லது பல தலைமுறைகளாகத் துக்கம் அனுசரிக்க எவ்வித அனுமதியும் இல்லை. கர்பலா நிகழ்வு நடப்பதற்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே அவர்களின் அன்பு மகன் இப்ராஹீம், சிறிய தந்தை ஹம்ஸா (ரலி), மற்றும் பல முக்கிய தோழர்கள் ஷஹீதாக்கப்பட்டனர் (கொல்லப்பட்டனர்). ஆனால், நபியவர்களோ அல்லது அவர்களுக்குப் பின் வந்த சஹாபாக்களோ (தோழர்களோ) அவர்களுக்காக ஆண்டுதோறும் துக்க நாளாக அறிவித்து, உடலைக் காயப்படுத்திக் கொண்டு துக்கம் அனுசரிக்கவில்லை. எனவே, ஆஷுரா நாளில் செய்ய வேண்டிய சுன்னத்தான அமல் நோன்பு நோற்பது மட்டுமே. மாறாக, கர்பலா நிகழ்வை முன்னிறுத்தி துக்கம் அனுசரிப்பதோ, மார்பில் அடித்து புலம்புவதோ இஸ்லாமிய வரம்புகளுக்கு உட்பட்டது அல்ல; அது நபியின் வழிமுறையும் அல்ல.
без подписи
ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதற்காக குடும்பத்தின் பொறுப்புதாரி தன்னுடைய பிள்ளைகளையும், குடும்பத்தையும் ஸஹர் உணவிற்காக எழுப்பி விட வேண்டும்!
без подписи
без подписи